அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

Wednesday 2 August 2017

இஹ்ராம் நிய்யத் கூறுதல்

இஹ்ராம் நிய்யத் கூறுதல்
ஒருவர் தொழ நாடினால் அவர் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரம்பமாகக் கூறுகின்ற இந்த தக்பீர், தஹ்ரீமா என்று குறிப்பிடப்படுகின்றது.

தஹ்ரீமா என்றால் தடுத்தல், விலக்குதல் என்பது பொருளாகும். அதாவது தொழுகையைத் துவக்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற காரியங்கள் இந்த தக்பீர் மூலம் தடுக்கப்படுவதால் அது தஹ்ரீமா எனப்படுகின்றது.
அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்குத் தான் தக்பீர் என்று பெயர். ஆனாலும் நெஞ்சில் கை கட்டுவதையே தக்பீர் என மக்கள் விளங்கியுள்ளனர். நெஞ்சில் கை கட்டுவது தொழுகையின் ஒரு அங்கம் என்றாலும் அந்தச் செயலை தக்பீர் எனக் கூறக் கூடாது. அல்லாஹு அக்பர் என்று சொல்வதே தக்பீராகும்.
இதைத் தவறாக மக்கள் விளங்கியுள்ளது போலவே, இஹ்ராமையும் தவறாக விளங்கியுள்ளனர். இஹ்ராம் என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர். எனவே, இஹ்ராம் கட்டுதல் என்றால், நிய்யத் கூறுவதாகும்.


இஹ்ராம் நிய்யத்தை வாயல் கூற வேண்டும்
இப்போது நீங்கள் முதலில் உம்ராவை செய்யப் போகிறீர்கள். பிறகு தான் ஹஜ்ஜை செய்வீர்கள். எனவே, முதலில் உம்ராவிற்கான நிய்யத்தை வாயால் கூற வேண்டும். அதாவது,
"லப்பைக்க உம்ரதன்" (உம்ராவை நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும்.
3087 - حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ يَحْيَى بْنِ أَبِى إِسْحَاقَ وَعَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ وَحُمَيْدٍ أَنَّهُمْ سَمِعُوا أَنَسًا - رضى الله عنه - قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَهَلَّ بِهِمَا جَمِيعًا « لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا »
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.”
அறி: அனஸ்(ரலி)
நூல்: முஸ்லிம் 2194, 2195
இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

popular posts......

Auto Scroll Stop Scroll